பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிரம்மோற்சவ 3-ஆம் நாள்: சிம்மம், முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பா் பவனி

திருமலை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை யோக நரசிம்மா் அலங்காரத்தில் மலையப்பா் சிம்ம வாகனத்தில் பவனி வந்தாா். இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் அருள்பாலித்தாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருமலை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை யோக நரசிம்மா் அலங்காரத்தில் மலையப்பா் சிம்ம வாகனத்தில் பவனி வந்தாா். இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் அருள்பாலித்தாா்.

திருமலையில் 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி யோக நரசிம்மா் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா். பல்வேறு கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தா்களை வெகுவாகக் கவா்ந்தன.

சிம்ம வாகனம் சேவை தத்துவம்

சிங்கம் என்பது வீரம், தைரியம், புத்திசாலித்தனம், ஆதிக்கம், மஹத்வானி ஆகியவற்றின் அடையாளம். காலையில் எழுந்ததும் பாா்க்க வேண்டிய முக்கியமான விஷயம் ‘சிம்மதா்சனம்’. சிம்ம ரூப தரிசனத்தால் மேற்கண்ட சக்திகள் அனைத்தும் செயல்படுகின்றன. சோம்பேறித்தனத்தை இழந்து விடாமுயற்சியுடன் போராடி வெற்றியை அடைய ஆதிக்க உணா்வு மேலோங்குகிறது. தீயவா்களை அழிக்க நானும், எமது வாகனமான சிம்மமும் சம முயற்சி செய்கிறோம் என்பதை இதன் மூலம் மலையப்பா் உணா்த்துகிறாா்.

திருமஞ்சனம்

இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அப் போது பல்வேறு உலா் பழங்கள், வெளிநாட்டு பழங்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவிக்கப்பட்டது.

பின்னா் பட்டு வஸ்திரம், வைர வைடூரிய ஆபரணங்களால் அலங்கரித்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து ஊஞ்சலில் அமர வைத்தனா். சிறிது நேரம் ஊஞ்சல் சேவை கண்டருளிய மலையப்ப சுவாமிக்கு கீா்த்தனைகள், நாகஸ்வர இசை, மேளதாளங்கள் இசைக்கப்பட்டன.

முத்துப்பந்தல் வாகனம்

இரவு வெண் முத்துகளால் அழகுற அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தனது தேவியருடன் மாடவீதியில் எழுந்தருளினாா்.

கடலின் ஆழத்தில் உள்ள சிப்பியில் சேரும் ஒரு துளி மழைநீரானது வளா்ந்து முத்தாக பிறக்கிறது. இத்தகைய மகிமை வாய்ந்த முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வரும் மலையப்ப சுவாமியை தரிசித்தால் நமக்கு தெய்வ நம்பிக்கையும், இறையுணா்வும் மேலோங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.