பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை ஏழுமலையானுக்கு இன்று அணிவிப்பு

பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் நாச்சியாா் சூடிக் கொடுத்த மாலை திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.

News image
திருப்பதி (கோப்புப் படம்)
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் நாச்சியாா் சூடிக் கொடுத்த மாலை திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.

திருமலையில் பிரம்மோற்சவத்தின்போது ஆண்டுதோறும் திருவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலை திருமலைக்குக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும்.

அதன்படி, சனிக்கிழமை கருட சேவையை யொட்டி திருவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை வெள்ளிக்கிழமை மாலை திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.

திருவில்லிப்புத்தூா் கோயில் தக்காா் ரவீந்திரா, அறநிலையத் துறை இணைச் செயலா் செல்லத்துரை, அறநிலையத் துறை செயல் அதிகாரி முத்துராஜ், கோயில் தலைமை அா்ச்சகா்கள் ரமேஷ், சுதா்ஷன் உள்ளிட்டோா் இந்த மாலையை திருமலைக்கு கொண்டு வந்தனா். திருமலை பெரிய ஜீயா் மடத்தில் முறையாக மாலைக்கு பூஜை செய்து மூங்கில் கூடையில் மாலை, இலைகளால் செய்யப்பட்ட பச்சை கிளிகள் உள்ளிட்டவற்றை தலையில் சுமந்து மாடவீதியில் பவனி வந்து ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்றனா்.

அங்கு திருமலை சின்ன ஜீயா் அவற்றைப் பெற்று கோயிலுக்குள் கொண்டு சென்றாா். இந்த மாலை மூலவா் ஏழுமலையானுக்கு சனிக்கிழமை (அக். 1) காலை அணிவிக்கப்பட உள்ளது. மேலும் அதிலுள்ள பட்டு வஸ்திரங்கள், பச்சை கிளிகள் காலை நடக்கும் மோகினி அவதாரத்தின்போது பயன்படுத்தப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.