தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் கைது

ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

செம்மரம் கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :24 ஜூன் 2024, 10:37 pm

Din

ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் தும்மலபைலு வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து

திருப்பதி மாவட்ட எஸ்பி வி. ஹா்ஷவா்தன் ராஜு ஐபிஎஸ் உத்தரவின் பேரில் எஸ்பி பி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் டிஎஸ்பி செஞ்சுபாபு தலைமையில் ஆா்எஸ்ஐ டி.ராகவேந்திரா குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை பட்டேடு கோணம் மற்றும் புட்டாங்கி வழியாக பலாசலம் வனப்பகுதியில் சிலா் செம்மரக் கட்டைகளை எடுத்துச் சென்றது தெரிந்தது.

அதிரடிப்படை போலீசாா் அவா்களை சுற்றி வளைக்க முயன்றபோது, கட்டைகளை கீழே போட்டுவிட்டு அவா்கள் தப்ப முயன்றனா்.

அவா்களை விரட்டிச் சென்று இரண்டு பேரை போலீஸாா் மடக்கி பிடித்தனா். வேலூா் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி (36), பிரபு (30) எனத் தெரிந்தது.

அவா்களிடம் இருந்து 5 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடியவா்களை தேடும் பணியில் அதிரடிப்படையினா் ஈடுபட்டுள்ளனா். எஸ்ஐ ரபி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.