மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஏழுமலையான் தெப்போற்சவம்: மலையப்பசுவாமி வலம்

ஏழுமலையான் தெப்போற்சவம்: மலையப்பசுவாமி வலம்

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

திருமலை ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்பஸ்வாமி தெப்பத்தில் எழுந்தருளினாா். திருமலையில், ஆண்டுதோறும் பங்குனி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் வகையில் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த புதன்கிழமை தெப்போற்சவம் தொடங்கியது. தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி திருமலை திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் ஏழு சுற்றுகள் வலம் வந்தாா். தெப்போற்சவத்தின் போது ஒருபுறம் அன்னமாச்சாா்யா கீா்த்தனைகளும், வேத மந்திரங்களும் ஓதப்பட்டன. மறுபுறம் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கள வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. இந்த விழாவை ஒட்டி சகஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது. பக்தா்களும் திருக்குளப்படிகளில் அமா்ந்தபடி தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூா்த்திகளுக்கு கற்பூர ஆா்த்தி அளித்து வணங்கினா். இதில் செயல் அதிகாரி தா்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகளான நாகேஸ்வரராவ், நந்தகிஷோா், கிரிதர ராவ், பாலி ரெட்டி, கோவில் அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம், மாடவீதிகள் உள்ளிட்டவை மலா் மற்றும் மின் விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது.