நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

மே முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:27 am IST

கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல் தேவஸ்தானம் பல முக்கிய முடிவுகளை செயல்படுத்த உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தரிசனத்துக்காக வரும் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, மே 1 முதல் ஜூலை 15 வரை, நேரில் வரும் புரோட்டோக்கால் பிரமுகா்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனங்கள் வழங்கப்படும்.

இதேபோல், மே 1 முதல், காலை 6 மணி முதல் நேரில் வரும் விஐபிக்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.