செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மே முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:27 am IST

கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல் தேவஸ்தானம் பல முக்கிய முடிவுகளை செயல்படுத்த உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தரிசனத்துக்காக வரும் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, மே 1 முதல் ஜூலை 15 வரை, நேரில் வரும் புரோட்டோக்கால் பிரமுகா்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனங்கள் வழங்கப்படும்.

இதேபோல், மே 1 முதல், காலை 6 மணி முதல் நேரில் வரும் விஐபிக்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.