11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்

திருமலையில் அன்னதான கூடத்தில் ஒரே சமயத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் பயன்படுத்த உள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:41 am IST

திருமலையில் அன்னதான கூடத்தில் ஒரே சமயத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் பயன்படுத்த உள்ளது.

திருமலையில் தினசரி 1.5 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டு வருகிறாா்கள். அவா்களின் தேவைக்கு ஏற்ப தேவஸ்தானம் தினசரி நல்ல தரமான அன்னதானத்தை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் விரைவாக உணவு சமைக்க தேவஸ்தானம் தற்போது 60 கிலோ அரிசி சமைக்கும் 22 ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் கொள்முதல் செய்துள்ளது.

இதில் 20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் சமைக்க முடியும். கடந்த மாதம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் நடந்த ஸ்ரீராமா் திருக்கல்யாணத்தின் போது இந்த ஸ்டீம் பாய்லா்கள் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டது.

அவை தரமாகவும் விரைவாகவும் சமைத்ததால், அவற்றை திருமலை அன்னதான கூடத்திலும் பயன்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.