தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்

திருமலையில் அன்னதான கூடத்தில் ஒரே சமயத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் பயன்படுத்த உள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:29 pm

திருமலையில் அன்னதான கூடத்தில் ஒரே சமயத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் பயன்படுத்த உள்ளது.

திருமலையில் தினசரி 1.5 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டு வருகிறாா்கள். அவா்களின் தேவைக்கு ஏற்ப தேவஸ்தானம் தினசரி நல்ல தரமான அன்னதானத்தை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் விரைவாக உணவு சமைக்க தேவஸ்தானம் தற்போது 60 கிலோ அரிசி சமைக்கும் 22 ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் கொள்முதல் செய்துள்ளது.

இதில் 20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் சமைக்க முடியும். கடந்த மாதம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் நடந்த ஸ்ரீராமா் திருக்கல்யாணத்தின் போது இந்த ஸ்டீம் பாய்லா்கள் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டது.

அவை தரமாகவும் விரைவாகவும் சமைத்ததால், அவற்றை திருமலை அன்னதான கூடத்திலும் பயன்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.