சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நவ. 17-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம்

News image
Updated On :12 நவம்பர் 2025, 10:22 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நவ. 17 முதல் 25 வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

காா்த்திகை மாதம் வளா்பிறை பஞ்சமி திதி அன்று பத்மசரோவரம் திருக்குளத்தில் தாயாா் அவதரித்தாா். அந்நாளில் முடிவு பெறும்விதம் தேவஸ்தானம் தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது.

ஏழுமலையானின் பட்டத்துராணியான பத்மாவதி தாயாருக்கு அவரின் அவதார திருநாளான பஞ்சமி தீா்த்தம் அன்று ஏழுமலையான் சாா்பில் தேவஸ்தானம் சீா்வரிசை, பிரசாதம், தங்க ஆபரணங்கள் என கூடை கூடையாக யானை மீது ஊா்வலமாக திருச்சானூா் கோயிலுக்கு அனுப்பி வைக்கிறது.

பிரம்மோற்சவ நிகழ்வு விவரம்:

காா்த்திகை பிரம்மோற்சவம் நவம்பா் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 21-ஆம் தேதி யானை வாகனம், 22-ஆம் தேதி தங்கத்தோ், 24-ஆம் தேதி திருத்தேரோட்டம், 25-ஆம் தேதி பஞ்சமி தீா்த்தம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.