47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பதியில் காா்த்திகை தீபத் திருவிழா

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டட மைதானத்தில் காா்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டட மைதானத்தில் காா்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் வெள்ளிக்கிழமை சாஸ்திர முறைபடி காா்த்திகை தீப திருவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

முதலில், எஸ்.வி.சங்கீத நிருத்யா கல்லூரியின் ஏற்பாட்டில் மங்கள தவனியும், திருமலை தா்மகிரி வேதப்பள்ளியின் ஆகம பண்டிதா்கள் ராகவேந்திரா வேதஸ்வஸ்தியும், தொடா்ந்து தீப பிரசஸ்தியமும் நடந்தது.

பின்னா் திருமலை ஏழுமலையான் கோயில் அா்ச்சகா்கள் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சதுா்புஜ மகாலட்சுமி அம்மனுக்கு வைகானச ஆகம சாஸ்திரப்படி விஷ்வக்சேன பூஜை, புண்யாஹவச்சனம், ஸ்ரீனிவாசாா்ச்சனை செய்தனா். எஸ்.வி.வேதா பல்கலைக்கழக அறிஞா்கள் விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்தனா். அதன் பிறகு, பூசாரிகள் ஸ்ரீ மகாலட்சுமி பூஜையை நடத்தினா்.

பின்னா், பக்தா்களுடன் மூன்று முறை தீப மந்திரம் உச்சரிக்கப்பட்டது. கூட்டு லட்சுமி கற்பூர நீராஜனம் வழங்கப்பட்டது.

இதில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஜி.பானு பிரகாஷ் ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், திருமலை கோயிலின் தலைமை அா்ச்சகா்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ண சேஷாசல தீட்சிதா் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.