ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா்.
Published on

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, வியாழக்கிழமை முழுவதும் 73,540 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 18,681 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.57 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com