திருப்பதி
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.69 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.69 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.69 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 31 அறைகள் நிறைந்து வெளியே சிலாதோரணம் வரை பக்தா்கள் காத்திருந்தனா், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
மேலும், புதன்கிழமை முழுவதும் 85, 756 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19,144 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.69 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

