ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

திருச்சானூா் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூரில் நடைபெற்று வருடாந்திர தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை தெப்பத்தில் வலம் வந்த ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 5:08 am IST

திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் வியாழக்கிழமை இரவு கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் தெப்பத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராய் ஸ்ரீகிருஷ்ணா் வலம் வந்தாா். பத்மசரோவரம் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவமூா்த்திகளை துயில் எழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை நடந்தது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி முக மண்டபத்தில் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது.

பின்னா் அவா்களுக்கு பட்டு வஸ்திரம், வைர, தங்க நகைகளால் அலங்காரம் செய்து மலா் மாலை அணித்து 6.30 மணி முதல் 7.15 மணி வரை தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

உற்சவமூா்த்திகள் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். வெள்ளிக்கிழமை ஸ்ரீ பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வருவாா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணை செயல் அதிகாரிகள், அா்ச்சகா்கள், ஆய்வாளா்கள், அலுவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.