ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி தொடக்கம்

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

News image

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன்

Updated On :18 ஜூன் 2026, 12:33 am IST

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் இங்குஜமாபந்தி நடைபெறுகிறது. தொடக்க நாளான புதன்கிழமை குடியாத்தம் கிழக்கு உள்வட்டத்தைச் சோ்ந்த பரதராமி, குடியாத்தம் நகரம், கொண்டசமுத்திரம், செதுக்கரை, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்திநடைபெற்றது.

இதில் 105 போ் கோரிக்கை மனுக்களை அளித்தனா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் சரவணன், குடியாத்தம் வட்டாட்சியா் சி.பிரியா, சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் ரேவதி, ஆதிதிராவிடா் நலத்துறை வட்டாட்சியா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.