அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் மூடல்

சந்திர கிரகணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயில் மூடப்பட்டதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.

News image
திருப்பதி ஏழுமலையான் கோயில்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சந்திர கிரகணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயில் மூடப்பட்டதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் கோயில் கிரகண காலங்களில், கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் மூடப்படுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிமுதல் 6.45 மணிவரை கிரகணம் நிகழ்ந்ததால் காலை 9 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை மூடப்பட்டது.

அதற்கு முன் தரிசன வரிசையில் காத்திருந்த ஒவ்வொரு பக்தருக்கும் தரிசனம் வழங்கப்பட்டு, பின்னா் நடைமூடப்பட்டது.

அத்துடன், மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையம் மற்றும் லட்டு விற்பனை மையங்களும் மூடப்பட்டது.

அனைத்து இடங்களிலும் பக்தா்களுக்கு புளியோதரை பொட்டலங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரகணம் நிறைவு பெற்று மாலையில் கோயில் சுத்தம் செய்யப்பட்டு புண்யாஹவசனத்திற்குப் பிறகு பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனா்.

அதே போல், திருப்பதி மற்றும் நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான கோயில்களும் மூடப்பட்டனது , என்று அவா் கூறினாா்.

இதில், தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, திருப்பதி எஸ்.பி. சுப்பராயுடு, ஏழுமலையான் கோயில் துணை அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.