குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்: விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து

உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, மாா்ச் 19-இல் தெலுங்கு வருட பிறப்பான உகாதியை முன்னிட்டு 17-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து

இதன் காரணமாக விஐபி பிரேக் தரிசனங்கள் மற்றும் அஷ்டதள பாத பத்மாராதன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 16 ஆம் தேதி புரோட்டோக்கால் விஐபி பிரேக் தரிசனங்களுக்கு வேறு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதேபோல், புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் தவிர, மாா்ச் 19 ஆம் தேதி புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாா்ச் 18 -ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.