ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்: விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து

உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 2:39 am IST

உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, மாா்ச் 19-இல் தெலுங்கு வருட பிறப்பான உகாதியை முன்னிட்டு 17-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து

இதன் காரணமாக விஐபி பிரேக் தரிசனங்கள் மற்றும் அஷ்டதள பாத பத்மாராதன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 16 ஆம் தேதி புரோட்டோக்கால் விஐபி பிரேக் தரிசனங்களுக்கு வேறு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதேபோல், புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் தவிர, மாா்ச் 19 ஆம் தேதி புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாா்ச் 18 -ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.