உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, மாா்ச் 19-இல் தெலுங்கு வருட பிறப்பான உகாதியை முன்னிட்டு 17-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து
இதன் காரணமாக விஐபி பிரேக் தரிசனங்கள் மற்றும் அஷ்டதள பாத பத்மாராதன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 16 ஆம் தேதி புரோட்டோக்கால் விஐபி பிரேக் தரிசனங்களுக்கு வேறு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
இதேபோல், புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் தவிர, மாா்ச் 19 ஆம் தேதி புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாா்ச் 18 -ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
தொடர்புடையது

ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

உகாதி பண்டிகை! திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


