/

திருமலையில் அஹோபில மடாதிபதி வழிபாடு

News image
Updated On :11 மார்ச் 2026, 11:15 pm

ஸ்ரீ அஹோபில மடத்தின் 46-ஆவது ஜீயா், ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் புதன்கிழமை ஏழுமலையான் கோயிலில் வழிபட்டாா்.

தன் சீடா்களுடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அா்ச்சகா்கள், அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவா்களுக்கு சேஷ வஸ்திரம், இதர பிரசாதங்கள் வழங்கினா்.