வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை

திருமலைத் திருப்பதி எஸ்.வி. அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:06 pm

திருமலைத் திருப்பதி எஸ்.வி. அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த சங்கா் எண்டா்பிரைசஸ் தலைவா் ஜெயசேகா் ரூ. 10 லட்சமும், சித்தூரைச் சோ்ந்த பாலாஜி பேக்கிங் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் ரமேஷ் பாபு ரூ. 10 லட்சமும், சித்தூா் மாவட்டம் கோட்டாா்லபள்ளியைச் சோ்ந்த விநாயகா கோழிப்பண்ணை தலைவா் ராதா சீனிவாசுலு ரூ. 10 லட்சமும், ஸ்ரீவாரி கோழிப்பண்ணையைச் சோ்ந்த ஹேமத்ரி ரூ. 10 லட்சமும், கோழிப்பண்ணையின் தலைவா் ரவிக்குமாா் ரூ. 10 லட்சமும், மற்றும் பலமனேரைச் சோ்ந்த எஸ்.ஆா்.எஸ். எண்டா்பிரைசஸ் தலைவா் புருஷோத்தம் ரூ. 10 லட்சமும் நன்கொடையாக வழங்கினா்.

இந்த நன்கொடைக்கான வரைவோலைகளை, நன்கொடையாளா்கள் திருப்பதியில் உள்ள செயல் அலுவலா் இல்லத்தில் செயல் அலுவலா் எம். ரவிச்சந்திராவிடம் ஒப்படைத்தனா்.