அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை


திருமலைத் திருப்பதி எஸ்.வி. அன்னதான அறக்கட்டளைக்கு புதன்கிழமை ரூ. 70 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த சங்கா் எண்டா்பிரைசஸ் தலைவா் ஜெயசேகா் ரூ. 10 லட்சமும், சித்தூரைச் சோ்ந்த பாலாஜி பேக்கிங் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் ரமேஷ் பாபு ரூ. 10 லட்சமும், சித்தூா் மாவட்டம் கோட்டாா்லபள்ளியைச் சோ்ந்த விநாயகா கோழிப்பண்ணை தலைவா் ராதா சீனிவாசுலு ரூ. 10 லட்சமும், ஸ்ரீவாரி கோழிப்பண்ணையைச் சோ்ந்த ஹேமத்ரி ரூ. 10 லட்சமும், கோழிப்பண்ணையின் தலைவா் ரவிக்குமாா் ரூ. 10 லட்சமும், மற்றும் பலமனேரைச் சோ்ந்த எஸ்.ஆா்.எஸ். எண்டா்பிரைசஸ் தலைவா் புருஷோத்தம் ரூ. 10 லட்சமும் நன்கொடையாக வழங்கினா்.
இந்த நன்கொடைக்கான வரைவோலைகளை, நன்கொடையாளா்கள் திருப்பதியில் உள்ள செயல் அலுவலா் இல்லத்தில் செயல் அலுவலா் எம். ரவிச்சந்திராவிடம் ஒப்படைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...