திருவண்ணாமலை கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை ஆகியவை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும், இணைப் பேராசிரியருமான சா.தியோபிலஸ் ஆனந்த்குமார் தலைமை வகித்தார். கால்நடைத் துறை இணை இயக்குநர் பி.குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கோட்டாட்சியர் இரா.உமா மகேஸ்வரி பயிலரங்க மலரை வெளியிட்டு, பயிலரங்கைத் தொடக்கிவைத்தார்.
இதில், துணை ஆட்சியர் (பயிற்சி) து.சுரேஷ், மாவட்ட துணை இயக்குநர் (நிர்வாகம்) த.மனோகரன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் து.சரத் ஆகியோர் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை விளக்கிப் பேசினர்.
இதில், திருவண்ணாமலை கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் சி.எம்.ஜெய்காந்த் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.