திருவண்ணாமலை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையே இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.மெய்யழகன் தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். வட்டார வள மேற்பார்வையாளர் பி.சின்னராஜ், வட்டார வள பயிற்றுநர்கள் கே.எம்.ஏழுமலை, கே.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கல்வித் துறை சார்பில் பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியில் பள்ளி
ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.