அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீபத் திருவிழா: அன்னதானம் வழங்கும் இடங்கள் தேர்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்  போது பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் இடங்களைத் தேர்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:22 am

DIN

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்  போது பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் இடங்களைத் தேர்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அன்ன தானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அன்ன தானம் வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அன்ன தானம் வழங்க நிதி அளிப்போர் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கலாம். இந்த நிதியைக் கொண்டு திருவண்ணாமலை நகரம், ஆணாய்ப்பிறந்தான், அடிஅண்ணாமலை, கோசாலை, வேங்கிக்கால் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, பயிற்சி துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் கிரிவலப் பாதையில் உள்ள ஆணாய்ப்பிறந்தான், அடிஅண்ணாமலை, கோசாலை, வேங்கிக்கால் பகுதிகளில் அன்ன தானம் வழங்குவதற்கான இடங்களை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தனர்.
ஆய்வின்போது, திருவண்ணாமலை வட்டாட்சியர் ஆர்.ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புருஷோத்தமன், கருணாகரன், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சுரேஷ்பாபு, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், ஊராட்சிச் செயலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.