ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

ஆரணி கைலாய நாதர் கோயில் கும்பாபிஷேக விழா

ஆரணி கைலாயநாதர் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதன்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:40 am IST

ஆரணி கைலாயநாதர் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதன்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.
ஆரணியில் உள்ள அறம் வளர் நாயகி சமேத கைலாயநாதர் கோயில் திருப்பணி ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்து வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு யாக சாலை பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதில் கோயில் சார்பில் அமைச்சருக்கு கும்ப மரியாதை செய்யப்பட்டது. பக்தர்கள் சங்கத் தலைவர் ஏ.பி.சுபாஷ்சந்திரபோஸ் அனைவரையும் வரவேற்றார். உடன் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், பக்தர்கள் சங்க பொருளாளர் வி.சம்பத், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றியச் செயலாளர் பி.ஆர்ஜி.சேகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பி.இராதாகிருஷ்ணன், நகர நிர்வாகி பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், அகிலேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.