காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை கலசப்பாக்கம், கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆரணியில் திமுகவுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் போராட்டங்கள்: திருவண்ணாமலை, களம்பூர், கண்ணமங்கலம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோதி தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் புதன்கிழமை சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதி திருமண மணடபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


