வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

திமுக, கூட்டணிக் கட்சியினர் மறியல்: 500 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. 
இந்த நிலையில், புதன்கிழமை ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் அண்ணா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக 
எம்ஜிஆர் சிலை வரை சென்றனர். 
பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், திமுக எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், அம்பேத்வளவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை, மதிமுக மாவட்டச் செயலாளர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.அப்பாசாமி, தமுமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீஸார் சுமார் 500 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.