காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் அண்ணா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக
எம்ஜிஆர் சிலை வரை சென்றனர்.
பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், திமுக எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், அம்பேத்வளவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை, மதிமுக மாவட்டச் செயலாளர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.அப்பாசாமி, தமுமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீஸார் சுமார் 500 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





