சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மணல் திருட்டு: 8 பேர் கைது

Updated On :25 டிசம்பர் 2018, 9:55 am IST

போளூரை அடுத்த ஓகூர் அருகே செல்லும் செய்யாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 8 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
போளூர் அருகே வேலூர் - திருவண்ணாமலை  சாலையில் காவல் உதவிஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போளூரை அடுத்த ஓகூர் அருகே செல்லும் செய்யாற்றில் இருந்து  பாக்மார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27), மோகன்தாஸ் (22), பரசுராமன்(48), ஏழுமலை(30), ஓகூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (34), அல்லிமுத்து (49) ஆகியோர் உரிய அனுமதியின்றி, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 8 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த போளூர் போலீஸார், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.