மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா,  "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:52 am IST

திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா,  "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கணேஷ் பன்னாட்டு உணவகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தமிழ்ச் சங்க நிறுவனர் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் ந.சண்முகம் வரவேற்றார். திருப்பூர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் த.மா.பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, மறைந்த தமிழ் அறிஞர்கள் பிரபஞ்சன், அ.ப.அறவாணன் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
நிகழ்ச்சியில், ஆய்வறிஞர் பி.கோ.கோவிந்தராஜன், புயல்மொழிப் புலவர் கோவிந்தசாமி, திருக்குறள் ராமசாமி, காமராஜ், முருகையன், கவிஞர் லதா பிரபுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.