ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்தி இன்னிசை

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
Updated on
1 min read

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 முதல் 5.30 மணி வரை ஆஸ்ரம வளாகத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எமானுவெல் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
பின்னர், மாலை 6.15 முதல் இரவு 8.15 மணி வரை ஸ்ரீகுருசரண் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 12-ஆம் தேதி இதேபோன்ற பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com