மகாத்மா காந்தி நினைவு தினம்

வந்தவாசி பகுதி கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
Updated on
1 min read

வந்தவாசி பகுதி கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு கல்லூரி நிறுவனர் ச.அருணாசலம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கல்லூரித் தாளாளர் பாலாமணி அருணாசலம், துணைத் தலைவர் அ.கணேஷ்குமார், இயக்குநர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கல்லூரிப் பொருளாளர் எஸ்.பழனிச்சாமி, முதல்வர் (பொறுப்பு) இரா.ஏழுமலை மற்றும் இயக்குநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com