வந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசி மகன் ஏழுமலை (27). இவரது மனைவி மீனா (23). இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக ஏழுமலை சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அந்தக் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் அருகே உள்ள மின்மாற்றி மீது ஏழுமலை திடீரென ஏறியுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் பலத்த காயமடைந்த ஏழுமலையை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மாசி அளித்த புகாரின்பேரில், பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

