வேட்டவலம் மலைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.
வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேட்டவலத்தை அடுத்த நடுத்திட்டு கிராமத்தில் மது விலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைப் பகுதியில் பாறைகளுக்கு நடுவே இரும்பு பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் கைப்பற்றி அழித்தனர். இந்தப் பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

