உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

போளூரில் அதிகபட்ச மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:37 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.
 திருவண்ணாமலை, போளூர், சந்தவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ மழை பதிவானது.
 இதுதவிர, ஆரணியில் 4.80, செங்கத்தில் 14, சாத்தனூர் அணைப் பகுதியில் 2.80, திருவண்ணாமலையில் 12.20, தண்டராம்பட்டில் 2, கலசப்பாக்கத்தில் 9 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.