செங்கம் நகரில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையின் இரு புறமும் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் சாலையை சில அடி தொலைவுக்கு ஆக்கிரமித்து, பொருள்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்ட நிலையில், தற்போது சாலையின் இரு புறமும் தற்காலிகக் கடைகள் அதிகரித்துள்ளன. மேலும், இந்தச் சாலையில் சரக்கு வாகனங்களை நிறுத்தி கடைகளுக்கு பொருள்களை இறக்குவதாலும், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டுச் செல்வதாலும் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சட்டவிரோத கைத்துப்பாக்கியுடன் சோயா சாப் விற்பனையாளா் கைது
நன்றியுணர்வால் மனதை நிரப்புங்கள்!

11.5.1976: ஹிந்தி எதிர்ப்பு பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டது
நாளைய மின்தடை குடவாசல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
