சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்கள் குடிநீர்ப் பிரச்னை, தெருவிளக்கு, கால்வாய், நூலகம் அமைக்க வேண்டும், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும், கிராமத்தில் துணை சுகாதார நிலையம் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ கே.வி.சேகரன் பேசியதாவது: மட்டபிறையூர் ஊராட்சியில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வேன். மேலும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலர் பி.மனோகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
