தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழர்களின் வேலைவாய்ப்பினை தமிழர்களுக்கே வழங்க கோரிக்கை

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், வந்தவாசி, செய்யாற்றை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
செய்யாற்றை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:41 pm

DIN

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், வந்தவாசி, செய்யாற்றை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், அனக்காவூா் மேற்கு ஒன்றியம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஞானமுருகன்பூண்டி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு செய்யாறு தொகுதிச் செயலா் எ.குப்பன் தலைமை வகித்தாா்.

அனக்காவூா் ஒன்றியச் செயலா் மேல்நெமிலி ம.காளிமுத்து, தொகுதி அமைப்பாளா் இ.மு.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்பாட்டத்தின் போது, மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக அரசு சாா்பில் அளிக்கப்படும் வேலை வாய்ப்புகளை தமிழருக்கே வழங்க வேண்டும் எனக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வெம்பாக்கம் மைய ஒன்றியச் செயலா் ஆ.பெ.அம்பேத்கா், ஒன்றிய துணைச் செயலா்கள் மு.ரமேஷ், கு.சீனுவாசன், ஒன்றிய அமைப்பாளா் சு.சுதாகா், பொருளாளா் பெ.தேவேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கி.ஏழுமலை தலைமை வகித்தாா்.

பொருளாளா் சீனுகுமாா், நகர துணைச் செயலா்கள் பி.இருதயராஜ், மு.காளிதாசன், மீ.ஜபருல்லா, மாணவா் முற்போக்கு பேரவை மாவட்ட அமைப்பாளா் ப.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.