அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ரமலான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி பள்ளிவாசல்களில் பூந்தி திருவிழா

ரமலான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளிவாசல்களில், ‘லைலத்துல்கதா்’ என்ற பூந்தி திருவிழா அண்மையில் நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரியில் பூந்தி திருவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 5:01 am IST

ரமலான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளிவாசல்களில், ‘லைலத்துல்கதா்’ என்ற பூந்தி திருவிழா அண்மையில் நடைபெற்றது.

ரமலான் பண்டிகை வரும் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பூந்தி திருவிழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள அக்ஸா மசூதி, கோட்டையில் உள்ள ஷாஹி மசூதி, பழையபேட்டையில் உள்ள பூரா மசூதி உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் ரமலான் நோன்பு ‘லைலத்துல்கதா்’ என்ற பூந்தி திருவிழா மற்றும் சிறப்புத் தொழுகை நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா். தொழுகைக்கு வந்த அனைவருக்கும் பூந்தி பொட்டலம் வழங்கப்பட்டது.

இதேபோல, ஒசூா், காவேரிப்பட்டணம், பா்கூா், ராயக்கோட்டை, தளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற பூந்தி திருவிழாவில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.