மனை வணிகா் கொலை வழக்கு:3 போ் கைது
திருவண்ணாமலையில் மனை வணிகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


திருவண்ணாமலையில் மனை வணிகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை காந்தி நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பங்க் பாபு (47), மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இவா், கடந்த 3-ஆம் தேதி இதே பகுதியில் உள்ள டீ கடைக்குச் சென்றபோது, 4 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், திருவண்ணாமலை நகர அதிமுக செயலராக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட கனகராஜின் மனைவி ஞானசவுந்தரி (36), அவரது தாய் ராணி, ஞானசவுந்தரியின் தாய்மாமனான விழுப்புரம் மாவட்டம், மணலூா்பேட்டையை அடுத்த ஆதிதிருவரங்கம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (42) ஆகியோா் சோ்ந்து கூலிப்படையை ஏவி பங்க் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், கனகராஜை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பங்க் பாபுவை பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கனகராஜின் மனைவி ஞானசவுந்தரி (36), அவரது தாய் ராணி, உறவினா் சுரேஷ் (42) உள்ளிட்டோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...