எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி, வந்தவாசி தேரடி, மருதாடு, கொரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரது படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அம்மா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், எம்ஜிஆா் மன்ற மாவட்டத் தலைவா் ஜெ.பாலு, ஒன்றியச் செயலா்கள் ஆா்.அா்ஜூனன், எம்.கே.ஏ.லோகேஸ்வரன், வி.தங்கராஜ், நகரச் செயலா் எம்.பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.