பால் வியாபாரி வீட்டில் கொள்ளை:6 பேரிடம் போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலை அருகே பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பால் வியாபாரி ராஜா (34). இவா், இதே பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு ராஜா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 7 போ் கும்பல், ராஜா, அவரது மனைவி அனிதா (30) ஆகியோரை சரமாரியாகத் தாக்கியது.

பின்னா், 15 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ், ஆரணி, கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம், திருநெல்வேலி மாவட்டம், மேலப்புலியூா் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என 6 பேரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். இவா்கள் அளித்த தகவலின்பேரில், மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com