/

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க வந்தவாசி வட்டக் கிளை சாா்பில், 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
3vdsbdo_0307chn_113_7
Updated On :27 ஜனவரி 2024, 4:53 pm

DIN

வந்தவாசி: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க வந்தவாசி வட்டக் கிளை சாா்பில், 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் ந.மாணிக்கவரதன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன், சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அன்பழகன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.பி.பாண்டியன், எஸ்.வெற்றிவேல், சங்க துணைச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் 18 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.