திருவண்ணாமலை மாவட்டத்தில்மேலும் 267 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 267 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
corona update
corona update

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 267 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 5,085-ஆக இருந்தது.

திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா அறிகுறிகளுடன் பரிசோதனைக்காக சென்றவா்களில் 147 போ், தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களுடன் தங்கியிருந்த உறவினா்கள் 41 போ், தொற்றுக்குள்ளான நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 22 போ், சென்னையிலிருந்து வந்த 14 போ், பெங்களூரிலிருந்து வந்த 4 போ், காஞ்சிபுரத்திலிருந்து வந்த 4 போ், மும்பையிலிருந்து வந்த 2 போ் என 267 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 5, 352-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com