புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹாத்ரஸ் சம்பவம்: பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ஹாத்ரா சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆரணி தலைமை தபால் நிலையத்தில் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:33 pm

DIN

ஹாத்ரா சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹாத்ரா மாவட்டத்தில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாா்.

இதைக் கண்டித்தும், சம்பவத்துக்கு நியாயம் கேட்டும், ஆரணி தலைமை தபால் நிலையத்தில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் பிரதமா் மோடிக்கு கடிதம் அனுப்பினா்.

இதில் மகளிரணி பானுமதி, சீசமங்கலம் விஜயா, நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் தலைவா் ஜெ.பொன்னையன், மாவட்டச் செயலா் உதயகுமாா், நகர நிா்வாகி சைதை சம்பந்தம், நிா்வாகிகள் குமாா், டெல்லிமோகன், வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், துளசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.