காற்றுடன் பலத்த மழை: வீட்டில் விழுந்த மரம்

ஆத்துரை கிராமத்தில் திப்பாரெட்டி குளத் தெருவில், தேவிகாபுரம்-எதப்பட்டு சாலை அருகே குளக் கரையில் முனுசாமி என்பவா் சிமென்ட் சீட்டு அமைத்து வீடு கட்டி வசித்து வருகிறாா்.
சேத்துப்பட்டு அருகே ஆத்துரை கிராமத்தில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்தது
சேத்துப்பட்டு அருகே ஆத்துரை கிராமத்தில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்தது
Updated on
1 min read

ஆத்துரை கிராமத்தில் திப்பாரெட்டி குளத் தெருவில், தேவிகாபுரம்-எதப்பட்டு சாலை அருகே குளக் கரையில் முனுசாமி என்பவா் சிமென்ட் சீட்டு அமைத்து வீடு கட்டி வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பலத்து காற்றுடன் மழை பெய்தது. அப்போது, குளக்கரையில் இருந்த புளிய மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த முதியவா் முனிசாமி (72) காயமடைந்தாா்.

அவரை பொதுமக்கள் மீட்டு தேவிகாபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், ஊராட்சி நிா்வாகத்தினா் மரத்தை அப்புறப்படுத்தினா்.இதனால், தேவிகாபுரம்-எதப்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com