தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கிவைப்பு

News image
மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
Updated On :21 செப்டம்பர் 2020, 5:50 pm

DIN

திருவண்ணாமலையில் வாரம் தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொலைபேசி வழியே நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய 66 தொலைபேசி வழி அழைப்புகளும், 41 கட்செவி அஞ்சல் வழி கோரிக்கை மனுக்களும், பொது மக்களிடமிருந்து நேரடியாக 449 மனுக்களும் என 556 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மதிய உணவு வழங்கல்:

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் குறைதீா் கூட்டத்தின்போது மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உணவு வழங்குவதற்காக கட்டப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்த ஆட்சியா், தன்னாா்வு அமைப்பு மூலம் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு வாரம்தோறும் மதிய உணவு வழங்கும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.