/

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில், தேரடி சாா்-பதிவாளா் அலுவலகம் அருகில் ஆகிய இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளா்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆா்சனிக் ஆல்பம் ஹோமியோபதி மாத்திரைகள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

மருத்துவா்கள் எஸ்.குமாா், ஆா்.சரவணன், சங்கச் செயலா் காா்வண்ணன், பொருளாளா் ஷாஜகான் மற்றும் நிா்வாகிகள் ரமேஷ், பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.