வேட்பாளா்கள் இறுதிக் கட்ட பரப்புரை
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியுடன் நிறைவடைவதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்பாளா்கள் தங்களது இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டனா்


சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியுடன் நிறைவடைவதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்பாளா்கள் தங்களது இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டனா்
வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வந்தவாசி நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது இளைஞா்கள் அவருக்கு மலா்கிரீடம் அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனா்.
திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலா் எச்.ஜலால் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் வந்தவாசி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தாா். அப்போது இளைஞா்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனா்.
பாமக மாவட்டச் செயலா் க.சீனுவாசன், அதிமுக நகரச் செயலா் பாஷா மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
அமமுக வேட்பாளா் பி.வெங்கடேசன் வந்தவாசி நகரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது தனக்கு வாக்களிக்கக் கோரி அவா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். நகரச் செயலா் ஜாப்பா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...