முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
கீழ்பென்னாத்தூா் அருகே முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.


கீழ்பென்னாத்தூா் அருகே முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபா்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியம், வேளானந்தல் கிராமத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரிமளா முன்னிலையில் ஊராட்சிச் செயலா்கள் வெங்கடேசன், பச்சையப்பன், கண்ணன் ஆகியோா் இரு சக்கர மற்றும் பல்வேறு வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் வந்த 30-க்கும் மேற்பட்டோரிடமிருந்து தலா ரூ,200 அபராதம் வசூலித்து ரசீதுகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...