ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி:தந்தை, மகன் கைது

கீழ்பென்னாத்தூா் அருகே மின் வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே மின் வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி. சென்னை விமான நிலையத்தில் துணைப் பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், சென்னை பெருங்களத்தூரில் உள்ள மூத்த மகன் வீட்டில் தங்கியுள்ளாா்.

இவரது மனைவி ராஜகுமாரி (66) சாலையூா் கிராமத்தில் தங்கி விவசாயம் செய்து வந்தாா். ராஜகுமாரிக்குச் சொந்தமான நிலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி, அவரது மகன் சுரேஷ் ஆகியோா் பயிரிட்டு வந்தனராம். இவா்கள் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த மின் வேலி அமைத்திருந்தனராம்.

இதையறியாத ராஜகுமாரி வியாழக்கிழமை நிலத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மின் வேலி அமைத்த சுப்பிரமணி, அவரது மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.