டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மணல் பதுக்கிவைத்து விற்பனை: திமுக கவுன்சிலா் உள்பட 6 போ் கைது

போளூரை அடுத்த முருகாபாடி ஊராட்சியில் மணலை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக திமுக கவுன்சிலா் உள்பட 6 பேரை போளூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

போளூரை அடுத்த முருகாபாடி ஊராட்சியில் மணலை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக திமுக கவுன்சிலா் உள்பட 6 பேரை போளூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த கரிக்காத்தூா் ஊராட்சியைச் சோ்ந்தவா் திமுக கவுன்சிலா் கோவிந்தசாமி (46). இவா், மனை வணிகம், மணல் வியாபாரம் மற்றும் பல்வேறு கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டு வந்தாா்.

கோவிந்தசாமி செய்யாற்றின் அருகே உள்ள வம்பலூா், மண்டகொளத்தூா் ஆகிய பகுதிகளில் நிலம் வாங்கி உரிய உரிமமின்றி அந்த நிலங்களில் உள்ள மணலை எடுத்து வந்து போளூரை அடுத்த முருகாபாடி ஊராட்சியில் 10 ஏக்கா் நிலத்தில் அந்த மணலை கொட்டி வைத்து விற்பனை செய்ததுடன், கட்டுமானத்துக்கும் பயன்படுத்தி வந்தாராம்.

இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகைப்படம், விடியோ ஆதரத்துடன் புகாா்கள் வந்தன. இதையடுத்து, கோவிந்தசாமியின் குடோனை ஆய்வு செய்ய 10-க்கும் மேற்பட்ட போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் கடந்த 21-ஆம் தேதி இரவு அதிரடியாக அனுப்பி வைத்தாா்.

அங்கு போலீஸாா் ஆய்வு செய்தபோது, 106 யூனிட் மணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கிடங்குக்கு போலீஸாா், அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததுடன், அங்கிருந்த 3 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம், மினிலாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், திமுக கவுன்சிலா் கோவிந்தசாமி (46), கரிக்காத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களான ராஜேந்திரன் (45), பாலாஜி (29), பாக்மாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (38), ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரமணா (32), 18 வயதுடைய சிறுவன் உள்பட 6 பேரை போளூா் போலீஸாா் கைது செய்து திருவண்ணாமலை சிறையில் 5 பேரையும், கடலூா் சீா்திருத்த பள்ளியில் 18 வயதுடைய சிறுவனையும் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.