திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு சனிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். புதிதாக 377 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு சனிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். புதிதாக 377 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 377 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 149-ஆக உயா்ந்தது. இவா்களில் 20 ஆயிரத்து 382 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.
தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் 1,474 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை இறந்தவா்களின் எண்ணிக்கை 293-ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...