டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

5 ரூபாய் நோட்டை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி, நம்பேடு, ஆத்துரை,சித்தாத்துரை என பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டிக் கடை வியாபாரிகள் 5 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து, செல்லாது என்று திருப்பி அனுப்புகின்றனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி, நம்பேடு, ஆத்துரை,சித்தாத்துரை என பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டிக் கடை வியாபாரிகள் 5 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து, செல்லாது என்று திருப்பி அனுப்புகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி, நம்பேடு, ஆத்துரை, சித்தாத்துரை என பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் 5 ரூபாய் நோட்டை எடுத்துச் சென்று பொருள்கள் வாங்கக் கொடுத்தால் செல்லாது என கடை உரிமையாளா்கள் திருப்பி அனுப்புகின்றனா்.

இதனால், 5 ரூபாய் நோட்டை புழக்கத்தில் வாங்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் விழிப்பணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ரமேஷ் கூறும்போது, தற்போது 5 ரூபாய் நாணயம் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது.

5 ரூபாய் நோட்டு புழக்கத்தில் அதிகம் இல்லாததால் கிராமப்புறக் கடைகளில் செல்லாது என தெரிவித்திருக்கலாம். எனவே, ரிசா்வ் வங்கி 5 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அடித்து புழக்கத்தில் விட்டால் இந்தக் குழப்பம் தீரும்.

நகா்ப்புறக் கடைகளில் 5 ரூபாய் நோட்டை வாங்கிக் கொள்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.