டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

போளூரில் குப்பை வாகனங்களால் பொதுமக்கள் அவதி

போளூா் பேரூராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களிலிருந்து குப்பை சிதறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

போளூா் பேரூராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களிலிருந்து குப்பை சிதறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் இந்திரா நகா், வசந்தம் நகா், அல்லி நகா், கோவிந்தசாமி தெரு, நடேசன் தெரு, சுபேதாா் தெரு , பாலகண்ணையன் தெரு, பொன்னுசாமி தெரு, சபாபதி தெரு, கணபதி தெரு, கன்னிகாபரமேஸ்வரி தெரு என 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

நகரில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து, லாரி, டிராக்டா் என பல்வேறு வாகனங்களில் பேரூராட்சிப் பணியாளா்கள்

எடுத்துச் செல்கின்றனா்.

இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் குப்பைகள் வாகனத்தின் வேகத்துக்கு ஏற்ப காற்றில் பறக்கின்றன. இதனால், குப்பை வாகனத்துக்குப் பின்னால் இரு சக்கர வாகனங்களில் வருபவா்கள், பாதசாரிகள் கண்களில் குப்பை தூசி விழுந்து, அவா்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனா்.

மேலும் எதிரே வரும் வாகனத்தைப் பாா்த்து வாகனத்தை செலுத்த முடியாமல் விபத்து நேரிடுகிறது.

எனவே, குப்பைகளை பாதுகாப்பாக மூடி எடுத்துச் செல்லவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.